Posts

Showing posts from March, 2018

மலைப்பகுதியில் நடந்துசென்று மருத்துவம் பார்த்த டாக்டர்

Image
கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்று, நடுவழியிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்து காப்பாற்றிய இளம் மருத்துவர் கந்தமல் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் வசிக்கும் ரைதா என்ற பெண் பிரசவம் நெருங்கும் நேரத்தில் சாலை வசதியற்ற பகுதியில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்தே அழைத்துவரப்பட்டார். வழியிலேயே கடும் சிரமத்திற்கு மத்தியில் தமது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், நஞ்சுக்கொடி உள்ளேயே தங்கிவிட்ட தகவல் அறிந்த யக்னதத்த ராத் (Yagnadatta Rath)என்ற இளம் மருத்துவர், ஆம்புலன்சில் புறப்பட்டார்.  வாகனம் செல்லமுடியாத கட்டத்தில் இறங்கி 4 கி.மீ. மலைப்பாதையை நடந்தே கடந்து தாயையும், சேயையும் காப்பாற்றினார். மலைவாழ் பெண்ணைக் காப்பாற்ற சிரத்தை மேற்கொண்ட மருத்துவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.

ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு சாதனை

Image
இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான கடல் பகுதியை 12 மணி 20 நிமிடங்களில் நீந்திக் கடந்து ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு சாதனை

கோவையில் இந்தியாவின் பெரிய பூச்சி மியூசியம்

Image
  கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைகழகத்தில் நாட்டின் மிகப் பெரிய பூச்சி அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  தமிழக முதல்வர் பழனிசாமி இந்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துள்ளார்.  உலகம் முழுவதிலும் உள்ள 22,122 இனங்களைச் சேர்ந்த சுமார் 84,000 பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள், பூச்சிகள் இடம்பெற்றுள்ளன.

28.5 கிமீ., நீந்தி சென்னை மாணவர் சாதனை.

Image
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு 11 மணி 58 நிமிடங்கள் கடலில் நீந்தி வந்து 24 வயதான சென்னை மாணவர் ராஜஈஸ்வர பிரபு சாதனை.

உலக தண்ணீர் தினத்தில் நொய்யல் சுனை நீர்

Image
பல ஆண்டுகளுக்கு பின்னர் நொய்யலின் சுனை நீரை சுவைத்து மகிழ்ந்த  கோவை மக்கள்!!! உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று (22.03.2018) நீர்நிலகளை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிறுதுளி சார்பில் வனத்துறை அனுமதியுடன் நொய்யலின் பல்வேறு சுனைகளிலிருந்து எடுக்கப்பட்ட நொய்யலின் சுனைநீர் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில்(காந்திபுரம் பேருந்து நிலையம்,உக்கம் பேருந்து நிலையம், டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம்,ரேஸ் கோர்ஸ் சிறுவர் பூங்கா,லட்சுமி மில்ஸ்,ரயில் நிலையம், நீதிமன்ற வளாகம்,Prozone Mall) சுமார் 200 தன்னார்வலர்களின் பங்களிப்போடு 20000 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோவை மாநகரில் இருக்கும் உக்கடம் குளம்,வாலாங்குளம்,குறிச்சி குளம்,சிங்காநல்லூர் குளம்,மற்றும் முத்தண்ணன் குளம் ஆகிய குளங்களில் இருக்கும் நீரினை காட்சிப்படுத்திடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வினை அனைத்து பொதுமக்களும் ஆவலோடு வரவேற்றனர்.மேலும் அவர்களுக்கு நீர் மற்றும் நீர்நிலைகளின் அவசியம் குறித்த போதுமான விழிப்புணர்வு கிடைத்ததாக தெரிவித்தனர். கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்...

வருமான வரியை தாக்கல் செய்ய ஈசியான வழி

Image
  கடந்த நிதி ஆண்டுகளுக்கான வருமான வரியினை நீங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால் இதோ உங்களுக்கான கடைசி வாய்ப்பு வரும் மார்ச் 31க்குள் தாக்கல் செய்யலாம்.  இலவசமாக வருமான வரியினை  www.incometaxindiaefiling.gov.in  என்ற இணையதளத்தில் மூன்றே படிகள் மூலம் தாக்கல் செய்து கொள்ளலாம்.  ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமான வரி இருக்கும் போது வருமான வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சி ஓட்டுநருக்கு நேர்ந்த அவமானம்

Image
கோவை மாநகராட்சியில், 14 வருடங்களாக குப்பை லாரி டிரைவராகப் பணிபுரிபவர் மணி. நாற்பதுகளை கடந்த வயதுக்காரர். `சென்ற வாரம் குப்பை அள்ளும் இடத்தில், ஒரு பெண்ணுக்கு `லாரியில் அமர்ந்தவாரே பதில் சொன்னார்’ என்ற காரணத்துக்காக,"குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடான்னு  செருப்பால் அடிச்சார்! - கோவை பணியாளருக்கு நேர்ந்த சோகம் மணியை செருப்பால் அடுத்திருக்கிறார் அந்தப் பெண்ணின் மகன்' என்ற தகவலைக் கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. `மணியை சாதிப் பெயரைச் சொல்லி செருப்பால் அடித்து இழிவுப்படுத்தியவரை, கைதுசெய்ய வேண்டும்' என்று மணியும் அவரோடு பணிபுரியும் சக துப்புரவுப் பணியாளர்களும் சேர்ந்து வழக்கு பதிந்துள்ளனர் “இந்த நிமிஷம் என் உடம்புல உசுரு ஒட்டியிருக்கிறதுக்குக் காரணம், என் பொண்டாட்டி, புள்ளைங்கதான். நான் போயிட்டேன்னா அதுங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சிரும். என்னைய நம்பி யாரும் இல்லைன்னா இந்நேரம் நான் செத்திருப்பேன் சார். 'தூக்குல தொங்கிடலாமா’னு இருக்கு..  எங்களை மத்தவங்க நடத்துற விதம்தான் எங்களால ஜீரணிக்கவே முடியலை. காலையில எழுந்து குளிச்சு, சாமி கும்பிட்டுட்டுத்தான் நாங்களும் வேலைக்கு வ...

ஸ்ரீகாந்த் நமது நாட்டின் சொத்து

Image
பத்தாண்டுகளுக்கு முன்னல் நமது ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் ஆந்திராவில் உள்ள பார்வையற்ற பள்ளிக்கு சென்றிருந்தார்.அங்குள்ள மாணவனை பார்த்து, உன் எதிர்கால ஆசை என்ன என்று வினவினார். அந்த மாணவன் ஸ்ரீகாந்த்," உங்களைப் போல் ஜனாதிபதி ஆகவேண்டுமென" கூறினான். அவனது உற்சாகத்தையும், தெளிவையும் உணர்ந்த கலாம் அவனை லீட் இந்தியா2020 அமைப்பில் இணைத்து படிக்க வைத்தார்.  12 ம் வகுப்பில் 98% மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவனாக வெளிவந்தான். அவன் IIT யில் சேர விழைந்தான். பார்வையற்ற குறைபாட்டினால் அவனை இந்திய  IIT சேர்க்க மறுத்தது.  கலாம் ஆலோசனைப்படி அமெரிக்காவில் உள்ள MIT( மசாசூட் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)  யில் சேர்த்து படிக்க வைத்தார். அமெரிக்க கல்லூரியிலே முதல் மாணவனாக வெளியே வந்தான். அவனுக்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் சிறந்த வேலைவாய்ப்பை வழங்க முன் வந்தது.  ஆண்டிற்கு 1000 டாலர்( இந்திய ரூபாய் 63 லட்சம்)  ஜப்பான் நிறுவனம் மாதத்திற்கு உதவித்தொகை 6 லட்சம்.   தர முன் வந்தது.  எதையும் ஏற்கவில்லை.  அதற்கு அவன் சொன்ன காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்த...

மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த கணவனால் ஒரு சிறுமி கார் மோதி ப்லி

Image
சென்னை சூளைமேட்டில் மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த கணவனால் ஒரு சிறுமி கார் மோதி உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் சிறுமி உயிரிழந்தார். தாயின் பிறந்த நாளில் சிறுமி உயிரிழந்தது அக்குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சூளைமேடு வன்னியர் தெருவில் வசிப்பவர் துரைராஜ். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் பவித்ரா (7) என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். பவித்ரா துரைராஜின் இளைய மகள். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது தாயார் ஜெயந்தியின் பிறந்த நாள் என்பதால் அதை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். தோழிகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த பவித்ரா, அருகில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் பின்னால் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் வேகமாக வந்து பவித்ரா ஒளிந்திருந்த காரின் மீது  மோதியது. இதில் நின்றிருந்த கார் பவித்ராவின் மீது ஏறி நசுங்கியது. இதில் சிறுமி பவித்ரா பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளோர், சிறுமியின் தந்தை உள்ளிட்டோர் குழந்தையை அரு...

வளர்த்துவிட்ட ஆசிரியர்களுக்கு மரியாதை

Image
ஆசிரியர்களுக்கு_மரியாதை : தன்னை வளர்த்துவிட்ட ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் காட்சி  ! தனது ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்திய இந்த மாணவனின் பெயர் திரு KSகந்தசாமிIAS தற்போது திருவண்ணாமலை ஆட்சித் தலைவராக பணியாற்றி வருகிறார் என்பதே இந்த நிகழ்வின் சிறப்பு. : தன்னை வளர்த்துவிட்ட ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் காட்சி  !

கலைஞன்

Image

நவீன உத்தியைக் கையாளத் தொடங்கிய சீன காவல்துறை

Image
சீனாவில், ஸ்மார்ட் கிளாஸ் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளை அணிந்து குற்றவாளிகளைக் கண்டறியும் நவீன உத்தியை, காவல்துறையினர் கையாளத் தொடங்கி உள்ளனர். எல்.எல்.விஷன் (LL Vision) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தக் கண்ணாடிகள், புலனாய்வுத்துறையால் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள முக அடையாளம் உள்ளிட்ட தகவல்களுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். குற்றவாளிகள் யாரேனும் வாகனங்களில் சென்றால், சாலைகளின் முக்கியச் சந்திப்புகளில் இந்தக் கண்ணாடிகளை அணிந்து நிற்கும் போலீசாரின் கண்களில் இருந்து தப்ப முடியாது. ஏற்கனவே குற்றப்பட்டியலில் பதிவாகி இருக்கும் முகம் உள்ளிட்ட விவரங்களுடன் சாலையில் செல்லும் நபரின் அடையாளம் ஒத்திருப்பதை ஸ்மார்ட் கிளாஸ் எனும் நவீன கண்ணாடி காட்டிக் கொடுத்துவிடும். இத்தகைய ஸ்மார்ட் கிளாஸ் கண்காணிப்பு நடைமுறை விரைவில் இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பொருட்களைத் தயாரிக்கும் ஸ்டேக்யு (Staqu) நிறுவனம், இதற்கான ஸ்மார்ட் க்ளாஸ்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ...

திருப்பதி ஏழுமலையான் கூடுதல் பிரகாசத்தில்

Image
திருப்பதி கருவறையில் கூடுதல் நெய் விளக்குகள் ஏழுமலையானை தூரத்தில் இருந்தே தரிசிக்கலாம். திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் கூடுதல் நெய் விளக்குகளை ஏற்றி, த...

தேசத்தை அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள்...காத்திருந்த இஸ்லாமியர்கள்

Image
இன்று மும்பை சட்டசபையை முற்றுகையிட வந்த விவசாயிகளுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் காத்திருந்த சகோதரத்துவம...

காத்மாண்டுவில் பயணிகள் விமானம் பெரும் விபத்து...!

Image
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது விழுந்து நொருங்கி பெரும் விபத்து...! தரையிறங்கும் போது விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விமானம் புகுந்து தீப்பற்றியது. விமான விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு.