Posts

Showing posts from April, 2020

மிகப்பெரும் தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடியா? உண்மை என்ன?

Image
விஜய் மல்லையா, மெஹுல் சோக்சி உள்ளிட்ட மிகப்பெரும் தொழிலதிபர்களின் ரூ.68000 கோடி மதிப்புள்ள கடனை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இது குறித்து பல விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால் ஒன்றை விமர்சனம் செய்வதற்கு முன்பாக அதைப்பற்றி தெளிவாக என்னவென்று தெரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும். Write off என்பது வராக்கடன். Waive off என்பது கடன் தள்ளுபடி. தற்போது செய்யப்பட்டிருப்பது Write Off தானே தவிர. Waive off அல்ல. Write off க்கும் Waive off என்பதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக அதாவது 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கடன்கள் வராக் கடன்களாக கருதப்படும். கடன்களை நீண்ட ஆண்டுகளாக கடன் பட்டியலில் வைத்திருக்க முடியாது. அப்படி செய்தால் இருப்பு நிலை குறிப்பு என்று சொல்லப்படும் Balance Sheet ஐ Tally செல்வதில் பிரச்சனை ஏற்படும். எனவே அந்த கடன்களை வராக் கடன்கள் பட்டியலில் சேர்ப்பார்கள். அதாவது NPA (Non-Performing Assets). இதைதான் Accounting நடைமுறையில் Write Off என்று அழைப்பார்கள். வரா...

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் அனைவரும் உயிரிழப்பதில்லை. உயிரிழப்பு யாருக்கு ஏற்படுகிறது? எப்படி ஏற்படுகிறது?

Image
உலக அளவில் பெரும் அச்சத் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், பெரும்பாலும் முதியோர்களையும் நீரிழிவு, ஆஸ்துமா மற்றும் இதய நோய் உள்ளிட்ட உபாதைகளைக் கொண்டிருப்போரையுமே தீவிரமாக தாக்குகிறது. இறுதியாக, நிமோனியா காய்ச்சல் அதாவது நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தி மனிதர்களை, சார்ஸ் கோவிட் வைரஸ் வீழ்த்துகிறது. கொரோனா வைரஸ், முகம் வழியாக உடலில் நுழைந்த பின், தொண்டை அருகில் உள்ள செல்களில் தொற்றிக் கொள்கிறது. அப்போது சிலருக்கு தொண்டை கரகரப்பு ஏற்படும். பின்னர் சுவாசக் குழாய் வழியாக நுரையீரலின் வெளிப்பகுதியை அடைந்து, அங்கிருந்தபடி பல்கி பெருகி தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கின்றன. சுவாசக் குழாய் சுவர்களை அரிக்கத் தொடங்கி பின்னர் உட்புறத்தில் வீக்கத்தை வைரஸ் ஏற்படுத்துகிறது. இந்த நிலையை உடல் எட்டும்போது பாதிக்கப்பட்டவருக்கு கடும் இருமல் ஏற்படும். சுவாசக் குழாய் சுவர்களை அரித்து ஆல்வியோலி எனும் சுவாச சிற்றரைகளை கொரோனா வைரஸ் அடையும்போது பாதிப்பு அதிதீவிரமாகிறது. இந்த சிற்றரைகளில்தான் ஆக்சிஜனை உள்வாங்கி கரியமிலவாயுவை பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது. சுவாச சிற்றரை பாதிக்கப்படும்போது அங்கு நீர் கோ...

வெப்பம் அதிகரிக்கும் நிலையில் கொரோனா வைரஸ் வலுவிழக்கும்

வெப்பம் அதிகரிக்கும் நிலையில் கொரோனா வைரஸ் வலுவிழக்கும் வகையில் இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.         அமெரிக்க அறிவியல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனரகத்தின் செயல் தலைவர் வில்லியம் பிரையன், கொரோனா வைரஸ் தொடர்பாக கூறுகையில் உட்புற மற்றும் வெப்பம் குறைந்த நிலையில் கொரோனா வைரஸின் செயல்பாடு இயல்பாக இருக்கிறதென்றும், அதே வேளையில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் குறையும் நேரங்களில் கொரோனா வலுவிழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் நேரடி சூரிய ஒளியில் வைரஸ் விரைவாக மரணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் வெப்ப மண்டல நாடுகளான சிங்கப்பூரில் கூட கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே காணப்படுவது இந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது. கோடை காலத்தில் கொரோனாவின் தாக்கம் வலுவிழக்கும் என்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்து தொடர்பாக எச்சரிக்கையுடன், கவனமாக பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வில்லியம் பிரையன் கூறுகைய...

முதல்வரின் பாராட்டை பெற்ற நெல்லை துணை ஆணையர் சரவணன்...! யார் இவர்?

Image
காவல்துறை மக்களின் நண்பன் என்பதற்கு உதாரணமாக நெல்லை துணை ஆணையர் சரவணன் செயல்பாடு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். அவர் ஆற்றிவரும் பணியை நெல்லை மக்கள் பாராட்டி வந்த நிலையில் முதலமைச்சரும் பாராட்டி உள்ளார். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக கடந்த ஆண்டு பணியிட மாறுதலில் வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜுன் சரவணன். சென்னை போன்ற பெருநகரங்களில் பணிபுரிந்து இருந்தாலும், உணர்ச்சிகளுக்கு அதிக இடம் அளிக்கும் நெல்லை வாழ் மக்களிடம் அன்பான அணுகுமுறையாலும், எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பேசும் பேச்சினாலும், கொடுக்கும் புகார்கள் மீதான உடனடி நடவடிக்கையாலும் மனங்கவர்ந்த அதிகாரியாக மாறியிருக்கிறார். காவல்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் தாண்டி பொதுமக்களின் பல்வேறு நலன் சார்ந்த, சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளில் தலை காட்டி தன் முத்திரையைப் பதித்து வருபவர் அர்ஜூன் சரவணன். தினந்தோறும் இவரது பணிப்பதிவேட்டில் ஆக்கிரமித்திருக்கும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இளைஞர்கள், மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளாக இருக்கும். சமூக வலைதளங்களை எப்படி கையாள்வது என்பது இவருக்கு கைவந்த கலை. மாநகர காவல்...

போதைக்காக சானிடைசர் குடித்தவர் பலி: 3 பெண் குழந்தைகள் நிலை பரிதாபம்

Image
சூலூர் தாலுகா அலுவலக வீதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன் பெர்னாண்டஸ் (வயது 35). இவர் கடந்த 13 வருடங்களாக திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள பாரத் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். தற்போது   சூலூரில்  வசித்து கொண்டு சிலிண்டர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இந்த கம்பெனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களுக்கு கம்பெனி சார்பில், நோய்த்தடுப்பு நடவடிக்கையாக, கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமி நாசினி (சானிடைசர்) வழங்கப்பட்டது. இதை பெர்னாண்டஸ் தனது வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்துள்ளார். நேற்றும் (10.மார்ச்.2020) போதைக்காக சானிடைசரை குடித்து விட்டு தூங்கி உள்ளார்.  இந்நிலையில் இன்று அதிகாலை 02.00 மணிக்கு வீட்டில் அவர்  வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிச்சி அடைந்த அவரது மனைவி, பெர்னாண்டசை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் கொண்டு சென்ற போது வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள்...

தூத்துக்குடியில் 100 பவுன் தங்க நகை கொள்ளை போனதாக நாடகமாடிய பெண் கைது

Image
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய செல்வம்  நகரைச் சேர்ந்த வின்சென்ட் சேவியர் பிச்சை(59) என்பவர்  02.04.2020 அன்று இரவு தனது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், தானும் தன் மனைவி ஜான்சிராணியும்(58) படுத்திருந்த அறையை வெளிப்புறமாக தாழிட்டு பக்கத்தில் இருந்த அறையில் உள்ள பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றதாக 03.04.2020 அன்று காலை தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதுகுறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் வின்சென்ட் சவேரியார் பிச்சையின் மனைவி ஜான்சிராணி என்பவர் கணவரின் கஞ்சத்தனத்தின் காரணமாக  நகையை திருடியதோடு குடும்பத்தாரை ஏமாற்றும் விதமாக கொள்ளை சம்பவ நாடகமாடி வீட்டருகில் உள்ள காலி  இடத்தில் நகைகளை புதைத்து வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்  திருமதி. பிரேமா அவர்கள் வழக்குப்பதிவு செய்து ஜான்சி ராணியை கைது செய்தார். மேலும் திருடப்பட்ட 74.21 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்ப...

சீன பாம்பு கிராமம்

Image
`ஒரே கிராமம்... ஆண்டுக்கு 30 லட்சம் பாம்புகள்!’ - தொடரும் தடையால் கலங்கும் சீன `பாம்பு கிராமம்’ சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட இல்லை என்னும் நிலை உருவானதால் அங்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட வுகான் மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்தனர். எனினும் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு சீனாவில் தடை தொடர்கிறது. சீனாவில் கொரோனா முதல் முதலாக `வெட் மார்க்கெட்’ என்று அழைக்கப்படும் இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக நம்பப்படுகிறது. சில விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாகவும் பாம்புகளிடமிருந்து பரவியதாகவும் சொல்கிறார்கள். எனினும், இதற்கு இன்னும் முழுமையான அறிவியல் ரீதியான முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது இறைச்சி சந்தைகளும் திறக்கப்பட்டது. ஆனால், பாம்புகளை வளர்க்கும் பண்ணைகளுக்குத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பாம்பு அதிகம் ர...

பிளாக் டீ குடிப்பது நல்லதா? கெட்டதா?

Image
உலகம் முழுவதும் இருக்கிற மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் இருக்கிறது. இந்த தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது. நமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. சில வகை நோய்களாலும், சாப்பிட்ட உணவு நஞ்சாகிப்போனதாலும் சிலர் கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இச்சமயங்களில் இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்...

'போதை கணவனுக்கு கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே 100 பவுன் கொள்ளையடித்த மனைவி'' - அதிர்ச்சி தகவல்!

Image
'போதை கணவனுக்கு கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே 100 பவுன் கொள்ளையடித்த மனைவி'' - அதிர்ச்சி தகவல்! தூத்துக்குடியில் கணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து மயங்கச் செய்து, வீட்டில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் 58 வயதான வின்சென்ட். துறைமுக ஊழியரான இவரது மனைவி ஜான்சி ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். வின்செண்ட் - ஜான்சி தம்பதிக்கு இரு மகள்கள், இருவருக்கும் திருமணமான நிலையில் வீட்டில் கணவன் மனைவி மட்டும் வசித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் இருவரும் வீட்டுக்குள் முடங்கி இருந்த நிலையில் உள்பக்கம் பூட்டப்பட்ட வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையன் அள்ளிச்சென்றுவிட்டதாக தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் புகார் அளித்தார். காவல்துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். வயதான காலத்தில் வங்கியில் வைக்காமல் 100 சவரன் நகைகளை வீட்டில் வைத்தது ஏன்? என்ற கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்...