Posts

Showing posts from February, 2020

டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறேன்.-ரஜினிகாந்த் பேட்டி

டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறேன்.-ரஜினிகாந்த் பேட்டி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் , உளவுத்துறை தனது பணியை சரியாக செய்யாததே வன்முறைக்கு காரணம் டெல்லி வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்கவேண்டும் , இரும்புக்கரம் கொண்டு அடக்காவிட்டால் எதிர்காலத்தில் கடினமாகிவிடும் இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்* மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். CAA சட்டத்தை திரும்ப பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை , எந்த போராட்டம் நடத்தினாலும் பிரயோஜனம் இல்லை என்பது எனது கருத்து பாஜகவின் ஊதுகுழல் ,  பாஜக எனது பின்னால்  இருப்பதாக கூறுவது வேதனையாக உள்ளது என்ன உண்மையோ அதை மட்டுமே கூறுகிறேன் , வன்முறையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் , இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும்  அமைதிவழியில் போராடலாம் , வன்முறையாக மாறக்கூடாது. RAJINIKANTH INTERVIEW

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் விமானமும் காரும் !

Image
விமானம் அல்ல; மினி அதிபர் மாளிகை' - அசரவைக்கும் ட்ரம்ப் வருகை தரும் விமானத்தின் வசதிகள்! அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் விமானத்தின் குறியீட்டுப் பெயர் Air Force One. அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றின் மிக முக்கியமான அடையாளம் இது. அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான இந்த விமானம், சிறப்பான வடிவமைப்பையும் கட்டமைப்பையும் கொண்டது. அதிபர் மட்டுமே இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும். 1953-ம் ஆண்டு அதிபராக இருந்த ஐஸனாவர் சென்ற விமானத்தின் வழித்தடத்தில் லாக்ஹீட் நிறுவனத்தின் விமானம் ஒன்று பறந்து வந்ததால், விபத்து ஏற்படும் நிலை உருவானது. இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக அமெரிக்க அதிபரின் விமானம் மட்டும் ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற குறியீட்டுடன் அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து பல வகையான விமானங்கள் அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் ஏர் ஃபோர்ஸ் ஒன் சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 1990-ல் இருந்து போயிங் விசி 25 ஏ என்ற வகையைச் சேர்ந்த இரு விமானங்கள் அதிபர்களின் பயணத்துக்காகப் பயன்பட்டு வருகின்றன. இந்த விமானங்களின் உள்வடிமைப்பு பிரமாண்டமானது. 3 அ...

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு ஆல், அரசன், புளிய மரங்கள் ‘பலி’:

Image
நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு ஆல், அரசன், புளிய மரங்கள் ‘பலி’: ஆண்டுக்கு 2.5 லட்சம் மெட்ரிக் டன் புளி உற்பத்தி சரிந்து வருவாயும் இழப்பு வேலூர்: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்தே பிரதான பங்கு வகிக்கிறது.  நீர்வழி, நிலவழி, வான்வழி போக்குவரத்து என்ற மூன்றில் நிலவழி போக்குவரத்தில் ரயில் போக்குவரத்தை தவிர சாலை போக்குவரத்து பிரதான பங்கு வகிக்கிறது.  தமிழகத்தில் சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 2,274 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலைகளிலும், 2,250 கி.மீ மாநில நெடுஞ்சாலைகளிலும், பல்லாயிரம் கி.மீ தூரம் ஊரக சாலைகளிலும் புளியமரங்கள், ஆல், அரசன், வேம்பு, இலுப்பை, நாவல், பனை, புங்கன் மரங்கள் நிறைந்துள்ளன.  இதுபோக வனப்பகுதிகள், கிராமப்புறங்களிலும் தோப்புகளாகவும், தனித்த மரங்களாகவும் புளிய மரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன.  இவற்றில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில ெநடுஞ்சாலைகள், கிராமப்புற, நகர்ப்புற சாலைகள் என மொத்தம் 50 லட்சம் புளிய மரங்கள் இருந்தன.  இதுபோக வனம், விவசாயம் மற்றும் பிற நிலங்களில் என மொ...

இருமல் மருந்து குடித்ததால் 9 குழந்தைகள் உயிரிழப்பு: அது என்ன மருந்து?

Image
இருமல் மருந்தால் 9 குழந்தைகள் உயிரிழந்ததன் எதிரொலியாக, பல மாநிலங்களில் அந்த மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் அடுத்தடுத்து 9 குழந்தைகள் உயிரிழந்தன.  இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது குழந்தைகளின் உயிரை பறித்தது, COLDBEST-PC எனும் இருமல் மருந்து என்பது கண்டறியப்பட்டது.  அதில், DIETHYLENE GLYCOL என்‌னும் துணை வேதிப்பொருள் இருந்ததும் அதனால் மருந்தில் விஷத்தன்மை கூடியதும் ஆய்வின் மூலம் தெரியவந்தது.  COLDBEST-PC மருந்தை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள நிறுவனம் தயாரித்தாலும் அதன் வேதிப்பொருட்கள் சென்னையை அடுத்த மணலியில் தயாரிக்கப்பட்டதாகும். மருந்து உற்பத்தி தொடங்குவதற்கு முன் வேதிப்பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தாததே உயிரிழப்புக்கு காரணம் என அதிகாரிகள் கூறினாலும் இதுபோன்றவை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.  உயிரிழப்புகள் நிகழ்ந்த பின்னர் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் உரிமத்தை திரும்பப்பெற்றது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், 'வருமுன் காப்போம்' என்பதை அதிகாரிகள் பின்பற்றாதது ஏன் எனவும் ...

2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா?

Image
2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா? பயம் வேண்டாம் காரணத்தை தெளிவாக சொல்லி உள்ளது இந்தியன் வங்கி.!   பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. எனினும், ரூ.2000 நோட்டுக்கள் கள்ளத்தனமாக அச்சடிப்பது அதிகரித்துள்ளதால், இதனை முடிவுக்குக் கொண்டு வர 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி, ரூ.2000 நோட்டு அச்சடிப்பது குறைக்கப்பட்டு பின்னர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.  அதற்குப் பதிலாக கூடுதலாக ரூ.500, ரூ.200, ரூ.100 ஆகிய ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டது. இதில், ரூ.200 நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. அச்சடிப்பது நிறுத்தப்பட்டதால் ரூ.2000 நோட்டுகள் மக்களிடையே புழங்குவது குறைந்து வருகிறது.  ATM-களிலும் இந்த நோட்டுகள் வங்கிகள் சார்பில் அதிகமாக வைக்கப்படவில்லை. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்கள், இனி தங்களது வங்கி ஏடிஎம்களில் வைக்கப்படாது என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், வரும் 1ம்...

ஒடிசா கலைஞரின் பென்சில் முனையில் 0.5 அங்குல லிங்கம்

Image
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரை சேர்ந்த மினியேச்சர் கலைஞர் ஒருவர், பென்சில் முனையில், புள்ளி ஐந்து அங்குல அளவில் சிவலிங்கத்தை செதுக்கி அசத்தியுள்ளார். மிகவும் நுணுக்கமான, அந்த மினியேச்சர் லிங்கம், சிறிய பாட்டிலில் வைத்தவுடன் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

டிக்டாக்கிற்கு தடை மதுரை சுகந்தியை விரட்டிய மக்கள்..! காவல் நிலையம் முற்றுகை

Image
தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டி அருகே டிக்டாக்கில் ஆபாசமாக தோன்றி ஊரின் பெயரை கெடுத்ததாக இரண்டு பெண்களை ஊரை விட்டு வெளியேற்றி உள்ளனர். டிக்டாக் செயலிக்கு எதிராக ஊர் மக்கள் திரண்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..  தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதுரைசுகந்தி என்பவர் டிக்டாக்கில் மிக பிரபலம். கணவர் பட்டாளத்தில் வேலைப்பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி டிக்டாக்கில் முக்கல் முனங்கல் பாடல்களுக்கு வீடியோ வெளியிட்டு ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்ததாக கூறப்படுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் போக்குவரத்துமாக இருந்ததால் சுகந்திக்கு டிக்டாக்கில் கடும் அர்ச்சனை விழுந்தது. எதற்கும் அசராமல் சுகந்தி வீடியோ பதிவிட்டு வந்தார் அண்மையில் இரு பெண்கள் சுகந்திக்கும் அவரது காதலனுக்கும் எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது கூட காவல் நிலையத்துகே சென்று டிக்டாக் செய்து சவால் விடுத்தவர் சுகந்தி..! இந்த நிலையில் டிக்டாக்கில் சுகந்திக்கும் இளைஞர் ஒருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதில் சுகந்தியை விமர்சித்து டிக்டாக் பதி...

தமிழக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்புகள்..!

Image
1. கீழடியில் அருங்காட்சிகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு. 2. பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு. 3. தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.  4. தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 5. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு. 6. சென்னை - பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.  7. உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.  8. சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு. 9. சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு. 10. வேளாண்மைத்துறைக்கு 11,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 11. கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.  12. பொதுப்பணித்துறை, நீர்பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு. 13. அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.  14. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.  15. போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 16. மின்சாரத்துறைக்கு ரூ....

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்

Image
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையின் சவாலை ஏற்ற சச்சின் டெண்டுல்கர் ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்தார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டும் நோக்கத்தில் 10 ஓவர்கள் கொண்ட கண்காட்சி போட்டி மெல்பர்னில் நடைபெற்றது.  இந்த போட்டியில் தனது பந்துவீச்சை சச்சின் எதிர்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை எல்லீஸ் பெர்ரி சவால் விடுத்திருந்தார். இதனை ஏற்றுகொண்ட சச்சின் ஒரு ஓவர் மட்டும் பேட் செய்தார்.  ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் தான் எதிர்கொண்ட பந்துவீச்சை பவுண்டரியுடன் அவர் தொடங்கியது ரசிகர்களை பரவசப்படுத்தியது.

ஜான் பாய்டு டன்லப் 05.02.2020

Image
எளிதாக மிதிவண்டியினை ஓட்ட காற்றடைத்த சக்கரத்தை முதன்முதலாகக் கண்டறிந்து பயன்படுத்தியவர்_ ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும் கால்நடை மருத்துவருமான ஜான் பாய்ட் டன்லப் (John Boyd Dunlop) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 5).இவரைப் பற்றிய சில தகவல் ஸ்காட்லாந்து ஏர்ஷயர் என்ற இடத்தில் 1840-ல் பிறந்தவர். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் கால் நடை மருத்துவம் பயின்றார். முதலில் எடின்பர்க்கிலும், பிறகு அயர்லாந்து பெல்ஃபாஸ்டிலும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். குதிரைகள் கரடு முரடான சாலைகளில், கெட்டியான ரப்பரால் தயாரிக்கப்பட்ட கழுத்துப் பட்டையுடன் மிகவும் கனமான சுமைகளை கஷ்டப்பட்டு இழுத்து வருவதைப் பார்த்தார். அவற்றின் கஷ்டத்தை குறைக்கக் காற்று அடைக்கப்பட்ட குஷன்களை அதற்கு பதிலாக பயன்படுத்த முடியுமா என்ற சோதனையில் ஈடுபட்டார். அந்தச் சமயத்தில் (1887) இவரது ஒன்பது வயது மகன் தன் சைக்கிளை உருளைக் கற்கள் நிறைந்த சாலையில் கஷ்டம் இல்லாமல் சவுகரியமாக ஓட்டுவதற்கு ஏதாவது செய்யுமாறு கேட்டான். சைக்கிளின் கெட்டியான ரப்பர் டயர்களில் ஏதாவது மாற்றங்கள் கொண்டு வந்து மகனுக்கு உதவ முடியுமா ...

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் அசத்தல் வெற்றி

Image
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதிச்சுற்றில், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரிய வீரரை வீழ்த்தி, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். மெல்போர்ன் நகரில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி, வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. வாகையர் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சும்((Novak Djokovic)), ஆஸ்திரிய வீரர் டோமினிக் திம்மும்((Dominic Thiem)) மோதினர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வாகையர் பட்டத்தை 7 முறை வென்று "ஆஸ்திரேலிய ஓபனின் ராஜா"வாக திகழும் நோவக் ஜோகோவிச்சும், 5ஆம் நிலை வீரரான டோமினிக்கும் மோதியதால், ஆட்டத்தில் அனல் பறந்தது. இறுதியில், 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், நோவக் ஜோகோவிச் வெற்றிப்பெற்றார். இது, நோவக் ஜோகோவிச் வெல்லும், 8ஆவது ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும்

கொரோனா வைரஸ்

Image
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள நாவல் கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஊஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். விலங்கில் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது. விலங்குகளுடன் சீனவர்கள் நெருக்கமானவர்கள் என்பதால், ஊஹானில் இந்த வைரஸ் விரைவாக பரவத் தொடங்கியுள்ளது.  ஊஹான் மாகாணத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிக்கு சென்றவர்கள் மூலமாகவும் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது. *கொரோனா வைரஸ் பரவுவது எப்படி...? கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு வைரஸ் பரவும். *என்ன பாதிப்பை ஏற்படுத்தும்...? கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழ...

பட்ஜெட் 2020ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்- BUDGET 2020 BULLETIN

Image
  100 மாவட்டங்களில் குடிநீர் வசதியில் கவனம் * 20 லட்சம் விவசாயிகளுக்க சோலார் பம்புகள் அமைத்து தரும் திட்டம் * விவசாயிகளுக்கு வசதிக்காக வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்ல கிஷான் ரயில் சேவையை இந்திய ரயில்வே துவங்க உள்ளது. * வேளாண் விளை பொருட்களுக்கு கிரிஷி உதான் திட்டம் * 2020 ல் ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் இலக்கு * மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்னாக உயர்த்த திட்டம் * விவசாயம் மற்றும் நீர்பாசனத்திற்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு * ஜல் ஜீவன் திட்டத்திற்கு 2020-21 ல் ரூ.11,500 கோடி ஒதுக்கீடு * தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு * சுகாதாரத்துறைக்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு * விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் * தரமான உயர்கல்வி வழங்க நடவடிக்கைகள் * 150 பல்கலை.,களில் புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்படும். * நாட்டின் டாப் 100 கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் படித்து பட்டம் பெறும் வசதி. * இந்தியாவில் கல்வி கற்க INDSAT திட்டம் * மருத்துவமனைகளில் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். * கிராமப்புற பெண்களுக்காக தானிய லட்சுமி திட்டம் * உ.பி.,யில் தேசி...